கொஞ்சமும் தயங்காத டிஎஸ்பி.. 4வது நாளிலும் தொடர்ந்து 7 ஓவர்கள்.. இங்கிலாந்தை அலறவிட்ட முகமது சிராஜ்!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 7 ஓவர்களை தொடர்ச்சியாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது இங்கிலாந்து ரசிகர்களையே ஆச்சரியம் அடைய வைத்திருக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களை சேர்த்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், நிதீஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மிரட்டிய சிராஜ்
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் 4வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணியின் கிராலி - பென் டக்கெட் கூட்டணி தொடங்கியது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் அட்டாக்கை தொடங்கினார். பிட்சில் பவுன்ஸ் இருந்த காரணத்தால் சிராஜ் எதிரணியை ஒரு வழி செய்துவிட்டார். இதன் பலனாக சிராஜ் வீசிய 3வது ஓவரிலேயே டக்கெட் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
7 ஓவர்கள்
தொடர்ந்து, சிராஜ் வீசிய 6வது ஓவரில் போப் 4 ரன்களில் எம்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். பும்ரா 5 ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை முடித்து விலகிய நிலையில், மறுபக்கம் சிராஜ் தொடர்ச்சியாக 7 ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை வீசினார். 2வது விக்கெட்டை வீழ்த்திய பின், மீண்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்துவதற்காக 7வது ஓவரையும் வீச வந்தது இங்கிலாந்து ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
ஓய்வு கிடையாது
ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டின் 4வது நாள் ஆட்டம் இன்று. ஆனாலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் கொஞ்சம் கூட தளர்வு இல்லாமல் 7 ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை வீசி இருக்கிறார். பும்ராவை போல் 2வது டெஸ்ட் போட்டியில் சிராஜ் ஒன்றும் ஓய்வு கூட எடுக்கவில்லை. தொடர்ச்சியாக 3வது டெஸ்ட் போட்டியில் சிராஜ் விளையாடி வருகிறார்.
அதிக ஓவர்கள்
இது இந்திய ரசிகர்களையும் ஆச்சரியம் கொள்ள வைத்திருக்கிறது. 2022ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக அதிக ஓவர்களை வீசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சிராஜ் தான். சுமார் ஆயிரம் ஓவர்களுக்கு மேல் வீசி இருக்கிறார். மறுபக்கம் பும்ரா இன்னும் 900 ஓவர்களை கூட வீசவில்லை. எந்த பிட்ச், எந்த அணி என்பதையெல்லாம் பார்க்காமல் சிராஜ் தொடர்ச்சியாக அவரின் பணியை செய்து கொண்டே இருக்கிறார்.
3வது நாள் சம்பவம்
நேற்றைய ஆட்டத்தில் கூட ஜாக் கிராலியுடன் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மற்ற இந்திய வீரர்கள் அவர்களின் இடத்தில் இருக்க, எங்கேயோ இருந்த சிராஜ் விரைவாக ஓடி வந்து சுப்மன் கில்லுக்கு ஆதரவாக நின்றார். இதனால் முகமது சிராஜை ரசிகர்கள் ரியல் Work Horse என்று பாராட்டி வருகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications