சர்வதேச கிரிக்கெட்டின் 'ஸ்பின்' குயின்.. 350 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்த தீப்தி சர்மா!
பர்மிங்ஹம்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரான தீப்தி சர்மா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசாத்தியமான உலக சாதனையைப் படைத்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் 3 வடிவங்களிலும் சேர்த்து 350 விக்கெட்டுகளைக் வீழ்த்திய உலகளாவிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாகவே இந்த சாதனையை படைத்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த மைல்கல்லில், ஒரு சுழற்பந்து வீச்சாளராகத் தீப்தி சர்மா தடம் பதித்துள்ளது இந்திய கிரிக்கெட்டுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகும்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை இந்தியாவின் லெஜண்ட் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி 355 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒட்டுமொத்தமாக முதலிடத்தில் நீடிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களைத் தாண்டி, ஒரு ஸ்பின்னராக 350 விக்கெட்டுகள் என்ற இமாலய எல்லையை இதுவரை உலக மகளிர் கிரிக்கெட்டில் எந்தவொரு சுழற்பந்து வீச்சாளரும் தொட்டதே இல்லை.
ஆஃப்-ஸ்பின்னரான தீப்தி சர்மா தனது துல்லியமான பந்துவீச்சு, லைன் மற்றும் லென்த் மூலம் பேட்டர்களை திணறடித்து இந்த சாதனையை எட்டியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே உலக அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனையாக இருக்கும் தீப்தி, தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து விக்கெட்டுகளைக் குவித்து இந்த 350 விக்கெட்டுகள் என்ற அசாத்திய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த 2025 மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்குக் காரணமாய் இருந்து 'தொடர் நாயகி' விருது வென்ற தீப்தி சர்மா, தற்போதும் தனது அசுர ஃபார்மைத் தொடர்ந்து வருகிறார். 1000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை டி20-யில் கடந்த முதல் கிரிக்கெட் வீரர்/வீராங்கனை என்ற சாதனையும் இவருக்கு உண்டு. தற்போது ஸ்பின் பந்துவீச்சிலும் உலக சாதனை படைத்துத் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.
தற்போது 28 வயதே ஆகும் தீப்தி சர்மா, இன்னும் சில விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் உலக அளவில் ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற ஜூலன் கோஸ்வாமியின் சாதனையை முறியடித்து உலகிலேயே முதலிடத்தைப் பிடிப்பார். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 4 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications