Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த ஆல்ரவுண்டர் டிக்! குறுக்கே புகுந்த பஞ்சாப்! நேக்காக சாம் கரணை தூக்கிய சிஎஸ்கே! எப்படி நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணி எந்த விதமான பதற்றமும் இல்லாமல்.. எளிதாக சாம் கரணை அணியில் எடுத்துள்ளது. கடந்த சீசன் சிஎஸ்கே அணியில் ஆடாமல் போன அவர்.. இந்த சீசன் மீண்டும் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு ஃபாரீன் ஆல் ரவுண்டர் தேவை இருந்தது. அதை மனதில் வைத்தே இன்று ஏலத்தில் கவனமாக இருந்தது. இதன் காரணமாகவே இன்று டு பிளசிஸ் வந்த போது சிஎஸ்கே கேட்கவில்லை. அதேபோல் வாஷிங்டன் சுந்தர் வந்த போதும் சிஎஸ்கே கேட்கவில்லை.

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

அதோடு நிற்காமல்.. ஷரத்துல் தாக்கூர் வந்த போது கூட சிஎஸ்கே அவரை எடுக்க விரும்பவில்லை. முழுக்க முழுக்க வெளிநாட்டு ஆல் ரவுண்டர்களுக்கு மட்டுமே சிஎஸ்கே ரெடியாக இருந்தது.

அதன்படியே சிஎஸ்கே அணி எந்த விதமான பதற்றமும் இல்லாமல்.. எளிதாக சாம் கரணை அணியில் எடுத்துள்ளது. சாம் கரணை எந்த அணியின் எடுக்க விரும்பவில்லை. கடந்த சீசன் சிஎஸ்கே அணியில் ஆடாமல் போன அவர்.. பஞ்சாப் அணியில் ஆடினார்.. இந்த சீசன் மீண்டும் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார்.

பஞ்சாப் அணி அவரை ஆர் டிஎம் மூலம் எடுக்க முயன்றது. ஆனால் கடைசியில் ஆர்டிஎம் வேண்டாம் என்ற முடிவை எடுத்து.

நேற்று ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் அஸ்வின் திரும்பி வந்துள்ளார். ஐபிஎல் 2025 சீசனுக்காக ஆர் அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு திரும்பியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக மாறி உள்ளது. கேப்டன் தோனியால் மிக உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அஷ்வின் மீண்டும் தனது சொந்த மண்ணான சென்னைக்கு திரும்பி உள்ளார். பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு சென்று தற்போது கடும் போட்டிக்கு பிறகு அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி கைப்பற்றி உள்ளது.

நாள் 1க்குப் பிறகு ஒவ்வொரு அணிகளின் பணப்பையிலும் மீதமுள்ள மொத்தத் தொகை:

மும்பை இந்தியன்ஸ்: ரூ. 26.1 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரூ. 10.5 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரூ. 15.6 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ. 17.35 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரூ. 30.65 கோடி
டெல்லி தலைநகரங்கள்: ரூ. 13.8 கோடி
குஜராத் டைட்டன்ஸ்: ரூ. 17.5 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரூ. 14.85 கோடி
பஞ்சாப் கிங்ஸ்: ரூ. 22.5 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ரூ. 5.5 கோடி\

சிஎஸ்கே அணி நேற்று நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் சில சர்ப்ரைஸ் முடிவுகளை எடுத்துள்ளது.

கடந்த சீசனில் ஆடிய ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்க்கு மீண்டும் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத்தை ரூபாய் 10 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்தது. அதேபோல் இந்திய அணியின் ஸ்விங் பாஸ்ட் பவுலிங் வீரர் 4.80 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு உள்ளார்.

நேற்று எடுக்கப்பட்ட வீரர்கள்:

நூர் அகமது ரூ.10 கோடி ரூபாய்
டெவோன் கான்வே 6.25 கோடி ரூபாய்
ராகுல் திரிபாதி 3.40 கோடி ரூபாய்
ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்
ஆர் அஸ்வின் 9.75 கோடி ரூபாய்

விஜய் சங்கர் 1.2 கோடி ரூபாய்
கலீல் அகமது ரூ.4.80 கோடி ரூபாய்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

1 ருதுராஜ் கெய்க்வாட் (18 கோடி)
2 மதீஷா பத்திரனா (13 கோடி)
3 சிவம் துபே (12 கோடி)
4 ரவீந்திர ஜடேஜா (18 கோடி)
5 எம்எஸ் தோனி (4 கோடி)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+