ஆர்சிபி அணியின் உரிமையாளராகும் அனுஷ்கா சர்மா? மிகப்பெரிய முதலீட்டை செய்யும் விராட் கோலி!
பெங்களூர்: ஆர்சிபி அணியை விற்பனை செய்ய டியாகோ நிறுவனம் முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா சில பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஆர்சிபி அணியின் 3 சதவிகித பங்குகளை ரூ.400 கோடிக்கு வாங்க அனுஷ்கா சர்மா முன் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றால், பெங்களூர் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின. இதனால் ஆர்சிபி அணியின் மதிப்பு உச்சத்திற்கு சென்றது. இதனால் ஆர்சிபி அணியை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடிவு எடுத்தது.

ஆர்ச்பி ஆடவர் மற்றும் மகளிர் அணியின் மதிப்பாக சுமார் 2 பில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணியை வாங்குவதற்கு அடார் பூனவாலா, கவுதம் அதானி உள்ளிட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தைகளும் ஒருபக்கம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பங்குகளை வாங்குவதற்கு சில பாலிவுட் பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆர்சிபி அணியின் 3 சதவிகித பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி இருக்கிறார். இதற்காக ரூ.400 கோடி வரை முதலீடு செய்யவும் தயாராக இருப்பதாக அனுஷ்கா சர்மா தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும் 2 சதவிகித பங்குகளை ரூ.300 கோடி முதலீடு செய்து வாங்க விரும்புவதாக கூறப்படுகிறது.
2007ல் ஐபிஎல் விதிகள் உருவாக்கப்பட்ட போதே அந்தந்த அணிகளுக்காக விளையாடும் வீரர்கள் அந்த அணியின் பங்குகளை வாங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. விராட் கோலி ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் சூழலில், குடும்ப உறுப்பினரை ஆர்சிபி அணியின் பங்குகளை வாங்க ஐபிஎல் நிர்வாகம் அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை ஆர்சிபி அணியின் மீது அனுஷ்கா சர்மா முதலீடு செய்தால், அதன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே பாலிவுட் நட்சத்திரங்களான ஷாரூக் கான் மற்றும் ஜூகி சாவ்லா கேகேஆர் அணியையும், பிரீத்தி ஜிந்தா பஞ்சாப் கிங்ஸ் அணியையும் வாங்கியுள்ளனர். நடிகை ஷில்பா ஷெட்டியும் கூட ராஜஸ்தான் அணியின் பங்குகளை சில ஆண்டுகளுக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications