இலங்கையின் தேசிய துக்க நாளில் 'சரக்கு பார்ட்டி' வைத்து சர்ச்சையில் சிக்கிய இந்திய தூதர் சின்ஹா
இலங்கை தேசிய துக்க நாளில் மதுபான விருந்து நடத்தியதாக இந்திய தூதரகம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கொழும்பு: சிங்கள இசைமேதை பண்டித அமரேதாவின் மறைவை இலங்கை அரசு தேசிய துக்க நாளாக கடைபிடித்தது. இந்த நாளில் இலங்கைக்கான இந்திய தூதர் சின்ஹா மதுபானங்களுடன் பிரியாவிடை விருந்து அளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சிங்கள இசைமேதை அமரேதவவின் இறுதிச் சடங்குகள் கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமரதேவ மறைவுக்கு 1 வாரம் தேசிய துக்க நாள் கடைபிடிக்கப்படும் எனவும் இலங்கை அரசு அறிவித்திருந்தது. அமரதேவவின் இறுதிச் சடங்கு நடைபெற்ற வெள்ளிக்கிழமையன்று இரவு இந்திய தூதர் பொறுப்பில் இருந்து விடைபெறும் சின்ஹா ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருந்தில் மைத்ரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் மதுபானங்கள் தாரளமாக பரிமாறப்பட்டுள்ளன. மதுபாட்டில்களுக்கு அருகே இந்திய தூதர் சின்ஹா, இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாரச்சி நிற்கும் புகைப்படங்களும் இலங்கை ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளன.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications