அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைய 'ரா' காரணம்?
கொழும்பு: கொழும்புக்கான ரா உளவு அமைப்பின் தலைவரால் தான் மஹிந்தா ராஜபக்சே அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
அண்மையில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைய இந்திய உளவு நிறுவனமான ராவின் கொழும்புக்கான தலைவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கொழும்பில் இருந்து தற்போது மாற்றப்பட்டுள்ளாராம். ஆனால் இது வழக்கமான இடமாற்றல் தான் ராஜபக்சேவின் தோல்விக்கு அவர் காரணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் வெளியாகும் நாளிதழ் ஒன்றில், ராஜபக்சே தேர்தலில் தோல்வி அடைய எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான சிறிசேனவுக்கு உதவி செய்த ரா தலைவர் பணியை இழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பார் என்று கூறப்பட்டவர் ரனில் விக்ரமசிங்கே. ஆனால் அவரை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ராவின் கொழும்பு தலைவர் கேட்டுக் கொண்டாராம். மேலும் ரனிலை மைத்ரிபால சிறிசேனாவுக்கு அதிபர் தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டாராம்.
ராஜபக்சே சீனாவுடன் நெருக்கம் காட்டி இந்தியாவை கடுப்பேற்றி வந்தார். இது இந்திய அரசுக்கு எரிச்சலை அளித்தது. மேலும் இந்தியாவுக்கு தெரிவிக்காமலேயே ராஜபக்சே இலங்கையில் சீனாவுக்கு சொந்தமான 2 நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்த அனுமதித்தார். இந்த காரணங்களால் தான் ரா அதிகாரி ராஜபக்சேவின் தோல்விக்கு வழிவகுத்தார் என்று கூறப்படுகிறது.
இலங்கை தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் வேலை உள்ளதற்கான அறிகுறிகள் உள்ளது என்று ராஜபக்சேவுக்கு நெருக்கமான ஒருவர் முன்பு தெரிவித்திருந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications