அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைய 'ரா' காரணம்?
கொழும்பு: கொழும்புக்கான ரா உளவு அமைப்பின் தலைவரால் தான் மஹிந்தா ராஜபக்சே அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
அண்மையில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைய இந்திய உளவு நிறுவனமான ராவின் கொழும்புக்கான தலைவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கொழும்பில் இருந்து தற்போது மாற்றப்பட்டுள்ளாராம். ஆனால் இது வழக்கமான இடமாற்றல் தான் ராஜபக்சேவின் தோல்விக்கு அவர் காரணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் வெளியாகும் நாளிதழ் ஒன்றில், ராஜபக்சே தேர்தலில் தோல்வி அடைய எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான சிறிசேனவுக்கு உதவி செய்த ரா தலைவர் பணியை இழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பார் என்று கூறப்பட்டவர் ரனில் விக்ரமசிங்கே. ஆனால் அவரை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ராவின் கொழும்பு தலைவர் கேட்டுக் கொண்டாராம். மேலும் ரனிலை மைத்ரிபால சிறிசேனாவுக்கு அதிபர் தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டாராம்.
ராஜபக்சே சீனாவுடன் நெருக்கம் காட்டி இந்தியாவை கடுப்பேற்றி வந்தார். இது இந்திய அரசுக்கு எரிச்சலை அளித்தது. மேலும் இந்தியாவுக்கு தெரிவிக்காமலேயே ராஜபக்சே இலங்கையில் சீனாவுக்கு சொந்தமான 2 நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்த அனுமதித்தார். இந்த காரணங்களால் தான் ரா அதிகாரி ராஜபக்சேவின் தோல்விக்கு வழிவகுத்தார் என்று கூறப்படுகிறது.
இலங்கை தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் வேலை உள்ளதற்கான அறிகுறிகள் உள்ளது என்று ராஜபக்சேவுக்கு நெருக்கமான ஒருவர் முன்பு தெரிவித்திருந்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications