புலிகளை அழிக்க இலங்கைக்கு குத்தகைக்கு கொடுத்த ரோந்து கப்பலை 'அன்பளிப்பாக'வே வழங்கியது இந்தியா!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்காக இலங்கைக்கு குத்தகைக்காக கொடுத்த அதிநவீன ஆழ்கடல் ரோந்து கப்பலை அன்பளிப்பாகவே வழங்கியுள்ளது இந்தியா.

2006ஆம் ஆண்டு இலங்கை அரசு கேட்டுக் கொண்டதையடுத்து வரஹா என்ற ஆழ்கடல் ரோந்து கப்பலை இலங்கைக்கு குத்தகை அடிப்படையில் இந்திய அரசு வழங்கியது. இந்த ரோந்து கப்பலை சாகரா என்ற பெயரில் இலங்கை பயன்படுத்தியது. இதன் மூலமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வந்து கொண்டிருந்த ஆயுதக் கப்பல்கள் பல நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டன.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர் ஆழ்கடல் கண்காணிப்பில் இந்த கப்பலை இலங்கை பயன்படுத்தி வந்தது.

தற்போது இக்கப்பலை இலங்கைக்கு அன்பளிப்பாகவே கொடுத்துள்ளது இந்தியா. இதற்கான விழா கொழும்பு துறைமுகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இலங்கைக்கான இந்தியத் தூதர் சின்ஹா இக் கப்பலை இலங்கை பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்கவிடம் ஒப்படைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+