இசைப்பிரியா காட்சிகள் போலியாம்...காமன்வெல்த்தை சீர்குலைக்க முயற்சியாம்.. அலறுகிறது இலங்கை
கொழும்பு: இசைப்பிரியா கொலை தொடர்பாக சேனல்-4 வெளியிட்ட வீடியோ போலியானது, அதன்மூலம் காமன்வெல்த் மாநாட்டை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது எனத் தெரிவித்துள்ளது இலங்கை அரசு.
விடுதலைப் புலிகள இயக்கத்தைச் சேர்ந்தவர் இசைப்பிரியா. இவர் அங்குள்ள தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து வந்தார். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது இசைப்பிரியாகொல்லப்பட்டதாக இலங்கை அரசு இதுவரை கூறி வந்தது.
அது சம்பந்தமாக ஊடகங்களில் சில புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில் இசைப்பிரியாவை ராணுவ வீரர்கள் பிடித்து இழுத்துச் சென்ற வீடியோ பதிவை சேனல்-4 சில தினங்களுக்கு முன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அக்காட்சிகள் போலியாக சித்தரிக்கப் பட்டவை என மறுப்புத் தெரிவித்துள்ளது இலங்கை அரசு.

காமன்வெல்த் மாநாடு...
இலங்கையில் இம்மாதம் காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. ஏற்கனவே, உலக நாடுகள் பல அம்மாநாட்டில் தங்கள் நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றன.

இந்தியா பங்கேற்கும்...
இந்தியாவிலும் கூட அதற்கான கண்டனக் குரல்கள் எழுந்த வண்ணமே உள்ளது. ஆனால், பிரதமர் அம்மாநாட்டில் பங்கேற்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

வற்புறுத்தல்...
இந்நிலையில், இலங்கை அரசின் போர்க்குற்றத்திற்கு தற்போது புதிய ஆதாரம் கிடைத்திருப்பதால், அந்நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது எனத் தலைவர்கள் வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர்.

போர்க்குற்றவாளி...
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுவதன் மூலம், ராஜபக்சே அதன் தலைவராகி விடுவார். அதன் மூலம் போர்க்குற்றங்களில் இருந்து அவர் எளிதாக தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சேனல்-4....
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சேனல்-4 ஒரு புதிய வீடியோவை வெளியிட்டது. அதில், இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் கைகளை பின்புறம் கட்டி இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

செல்போன் காட்சிகள்...
அந்தக் காட்சிகள் அடையாளம் தெரியாத யாரோ ஓர் ராணுவ வீரரால் மறைமுகமாக எடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இசைப்பிரியா இறுதிக் கட்டப்போரில் கொல்லப் படவில்லை என எடுத்துரைத்தது அந்தக் காட்சிகள்.

போலியானவை...
ஆனால் சேனல்-4 வெளியிட்ட அந்தக் காட்சிகள் போலியானவை எனத் தெரிவித்துள்ளது இலங்கை அரசு. இது குறித்து அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ருவான் வணிகசூர்யா தெரிவித்துள்ளதாவது, ‘ஐ.நா. மனித உரிமை ஆணைய அமர்வுகள் மற்றும் காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ள முக்கியமான இந்த சமயத்தில், இலங்கையை இழிவுபடுத்தும் வகையில் சேனல்-4 வெளியிட்ட இந்த வீடியோ பதிவில் புதிதாக ஒன்றும் இல்லை.

மறுப்பு...
இந்த வீடியோவை நாங்கள் நிராகரிக்கிறோம். இது முழுவரும் செயற்கையாக உருவாக்கப்பட்டுளள்து. சரண் அடைந்த அல்லது பிடிபட்ட புலிகளை ஒருவரும் ராணுவத்தால் கொல்லப்படவில்லை' என்றார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications