For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழக மீனவர்களுக்கு எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்க அனுமதியில்லை – இலங்கை அதிபர் சிறிசேனா
கொழும்பு: இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சிறிசேனா தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை, அவர்களது படகுகளுடன் சிறைபிடிக்கும்படி கடற்படையினருக்கு சிறிசேனா உத்தரவிட்டதாக கூட்டத்தில் பங்கேற்ற மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் ஜஸ்டின் சொய்சா தெரிவித்தார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது, ஆண்டொன்றுக்கு 83 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் வந்து மீன்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரியிருந்தனர்.
Comments
sri lanka colombo fishermen sea tamil nadu இலங்கை கொழும்பு அனுமதி தமிழக மீனவர்கள் எல்லை மறுப்பு சிறிசேனா
English summary
A memorandum presented to Sri Lankan President Maithripala Sirisena by the Northern Province Minister of Fisheries B.Deniswaran on Thursday, has sought the deployment of the Lankan Coast Guard in the Palk Strait and Palk Bay to protect Lankan Tamil fishermen from Indian poachers and drug smugglers.
Story first published: Friday, April 3, 2015, 11:55 [IST]