இலங்கை நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்திய ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் 'சரக்கடித்ததாக' சர்ச்சை!!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று இரவு உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மது அருந்தி கூத்தடித்ததாக அமைச்சர் கூறிய புகாரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஊழல் மோசடி தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் கோத்தபாய ஆகியோருக்கு அந்நாட்டின் லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இதேபோல் இலங்கை நாடாளுமன்றத்திலும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் சம்மன் அனுப்பியதற்கு எதிராக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நேற்று இலங்கை நாடாளுமன்றத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் மது அருந்திவிட்டு கூத்தடித்தனர் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டி இருந்தார். இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்றும் அவர்கள் அமளியில் ஈடுபட நாடாளுமன்ற நடவடிக்கைகள் வரும் 27-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications