இலங்கை போர்க் குற்றம்... சர்வதேச விசாரணையே தேவை: வடக்கு மாகாண சபையில் அதிரடி தீர்மானம்
யாழ்ப்பாணம்: இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று தமிழர் வாழும் வடக்கு மாகாண சபையின் முதல்வர் விக்னேஸ்வரன் அதிரடியாக தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இலங்கை அரசு இதனை நிராகரித்து உள்நாட்டு விசாரணையே போதுமானது என வலியுறுத்தி வந்தது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்காவின் பிரதிநிதிகள், போர்க் குற்றங்களுக்கு உள்நாட்டு விசாரணையே போதுமானது; இது தொடர்பாக இம்மாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரும் என தெரிவித்திருந்தனர்.
இது உலகத் தமிழர்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மாகாண சபையில் கூட்டம் இன்று நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தின் போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து மாகாண சபையில், போர் குற்றங்களுக்காக சர்வதேச விசாரணை தேவை என்ற தீர்மானத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்தார். இத்தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது.
ஏற்கெனவே இலங்கை வடக்கு மாகாண சபையில், தமிழினப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications