இலங்கை போர்க் குற்றம்... சர்வதேச விசாரணையே தேவை: வடக்கு மாகாண சபையில் அதிரடி தீர்மானம்
யாழ்ப்பாணம்: இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று தமிழர் வாழும் வடக்கு மாகாண சபையின் முதல்வர் விக்னேஸ்வரன் அதிரடியாக தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இலங்கை அரசு இதனை நிராகரித்து உள்நாட்டு விசாரணையே போதுமானது என வலியுறுத்தி வந்தது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்காவின் பிரதிநிதிகள், போர்க் குற்றங்களுக்கு உள்நாட்டு விசாரணையே போதுமானது; இது தொடர்பாக இம்மாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரும் என தெரிவித்திருந்தனர்.
இது உலகத் தமிழர்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மாகாண சபையில் கூட்டம் இன்று நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தின் போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து மாகாண சபையில், போர் குற்றங்களுக்காக சர்வதேச விசாரணை தேவை என்ற தீர்மானத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்தார். இத்தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது.
ஏற்கெனவே இலங்கை வடக்கு மாகாண சபையில், தமிழினப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications