For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மீனவர்கள் 42 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: தமிழக மீனவர்கள் 42 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 38 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றது.

அதேபோல், பிப்ரவரி 2-ந்தேதி மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து கொண்டு சென்றது. இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

3 முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள், இன்று 4-வது முறையாக இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம் 42 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தது. விடுதலையான 42 பேரும் விரைவில் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
A Lankan court released 42 Indian fishermen on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X