இலங்கை நாடாளுமன்றத்தில் பிரபாகரனுக்கு தமிழ் எம்.பி. ஸ்ரீதரன் புகழாரம்
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. ஸ்ரீதரன் நேற்று புகழாரம் சூட்டினார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஸ்ரீதரன் பேசியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் போராட்டம் நியாயமானது. அதில் தவறில்லை. அவரது பிறந்த நாள் இன்றைய தினம் அமைந்துள்ளது.

மாவீரர் தினத்தில் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியம். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் ஒரு சுதந்திர போராட்டமாக கருதப்பட வேண்டும் என்றார்.
அவரது இந்த உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரபாகரன் குறித்து ஸ்ரீதரன் எம்.பி. ஆற்றிய உரையை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனால் பிரபாகரன் குறித்தும் மாவீரர்கள் குறித்தும் அவர் உரையாற்றிய சில பகுதிகள் நீக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications