78 'இந்திய' மீனவர்களை விடுதலை செய்ய மகிந்த ராஜபக்சே உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையால் கைது செய்யப்பட்ட 78 இந்திய மீனவர்களையும் உடனே விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. தமிழக மீனவர்கள் 82 பேரை நேற்று இலங்கை அரசு கைது செய்தது.

Sri Lankan government will release 78 Indian fishermen: Mahinda Rajapaksa

இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே சென்னை சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை தமிழக அரசு விடுதலை செய்தது.

இந்த நிலையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவு செய்துள்ளதாவது:

13 இலங்கை மீனவர்களை இந்தியா இன்று விடுதலை செய்துள்ளதை நான் வரவேற்கிறேன்.

Sri Lankan government will release 78 Indian fishermen: Mahinda Rajapaksa

இந்திய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள 78 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

அதே போல் எஞ்சிய இலங்கை மீனவர்கள் அனைவரையும் இந்தியாவும் விரைவில் விடுதலை செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+