For Daily Alerts
Just In
வெளிநாடுகளின் அனுதாபமோ, கருணையோ தேவையில்லை: ராஜபக்சே
கொழும்பு: வெளிநாடுகளின் அனுதாபத்தை கோரிய காலம் முடிவடைந்து விட்டதாகவும், அனுதாபத்தை எதிர்பார்த்த, அனுதாபம் கோரிய காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
கொழும்புவில் கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய ராஜபக்சே, தற்போது பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கும் நாடாக இலங்கை உருவாகியுள்ளது எனக் கூறினார்.
தோல்வியடைந்த நாடுகளைப் போன்று எவரின் அனுதாபத்தையும், கருணையையும் கோரி நிற்க வேண்டிய அவசியமில்லை என்றும் ராஜபக்சே கூறினார். நாட்டை நேசிக்கும் ஒரு மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும், நாடு பற்றி பெருமிதத்துடன் பேசக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
English summary
President Mahinda Rajapaksa said that the dependent era in which we had to wait other’s mercy and sympathy is over and today Sri Lanka stands proudly on its own strength. The President was speaking at the 163rd prize giving of Royal College, Colombo at the Nava Rangahala yesterday (July 10).
Story first published: Friday, July 11, 2014, 16:59 [IST]