வெளிநாடுகளின் அனுதாபமோ, கருணையோ தேவையில்லை: ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: வெளிநாடுகளின் அனுதாபத்தை கோரிய காலம் முடிவடைந்து விட்டதாகவும், அனுதாபத்தை எதிர்பார்த்த, அனுதாபம் கோரிய காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

கொழும்புவில் கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய ராஜபக்சே, தற்போது பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கும் நாடாக இலங்கை உருவாகியுள்ளது எனக் கூறினார்.
தோல்வியடைந்த நாடுகளைப் போன்று எவரின் அனுதாபத்தையும், கருணையையும் கோரி நிற்க வேண்டிய அவசியமில்லை என்றும் ராஜபக்சே கூறினார். நாட்டை நேசிக்கும் ஒரு மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும், நாடு பற்றி பெருமிதத்துடன் பேசக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications