ஈழத் தமிழர்களை காக்க தவறிவிட்டது ஐ.நா.. வெட்கமில்லாமல் பேசும் பான் கீ-மூன்!
கொழும்பு: இலங்கை இறுதிகட்ட போரின் போது தமிழர்களை காக்க தவறிய ஐக்கிய நாடுகள் சபை, தற்போது ஈழத் தமிழர்களை காக்க தவறிவிட்டோம் என அதன் பொதுச் செயலாளர் பான் கீ-மூன் கூறியிருப்பது உலக தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் பான் கீ மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: ஐ.நா., சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் சரியாகச் செயல்பட்டிருந்தால், இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, அதிக அளவிலான மனித உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து ராணுவம் குறைக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்களை, சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 30 ஆண்டு கால போரின் போது ஏற்பட்ட பாதிப்புக்களைச் சரிசெய்வதில் இலங்கை அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அவற்றைச் சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே இறுதி கட்ட போர் நடந்தது. இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதல்களுக்கு பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள் வீசப்பட்டன.
ஒருகுறிப்பிட்ட இடத்தில் முள்வேளியில் அடைக்கப்பட்டு தமிழர்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். கடுமையான ஆயுதங்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது ஐ.நா., பொதுச்செயலாளராக இருந்த பான் கீ மூன் தமிழர்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
ஆனால் தற்போது ஈழத் தமிழர்களை காக்க தவறிவிட்டோம் என ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கீ-மூன் கூறியிருப்பது உலக தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு சென்ற பான் கி-மூன் தற்போது 2வது முறையாக அங்கு சென்றுள்ளது நினைவு கூரத்தக்கது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications