ஈழத் தமிழர்களை காக்க தவறிவிட்டது ஐ.நா.. வெட்கமில்லாமல் பேசும் பான் கீ-மூன்!
கொழும்பு: இலங்கை இறுதிகட்ட போரின் போது தமிழர்களை காக்க தவறிய ஐக்கிய நாடுகள் சபை, தற்போது ஈழத் தமிழர்களை காக்க தவறிவிட்டோம் என அதன் பொதுச் செயலாளர் பான் கீ-மூன் கூறியிருப்பது உலக தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் பான் கீ மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: ஐ.நா., சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் சரியாகச் செயல்பட்டிருந்தால், இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, அதிக அளவிலான மனித உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து ராணுவம் குறைக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்களை, சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 30 ஆண்டு கால போரின் போது ஏற்பட்ட பாதிப்புக்களைச் சரிசெய்வதில் இலங்கை அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அவற்றைச் சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே இறுதி கட்ட போர் நடந்தது. இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதல்களுக்கு பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள் வீசப்பட்டன.
ஒருகுறிப்பிட்ட இடத்தில் முள்வேளியில் அடைக்கப்பட்டு தமிழர்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். கடுமையான ஆயுதங்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது ஐ.நா., பொதுச்செயலாளராக இருந்த பான் கீ மூன் தமிழர்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
ஆனால் தற்போது ஈழத் தமிழர்களை காக்க தவறிவிட்டோம் என ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கீ-மூன் கூறியிருப்பது உலக தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு சென்ற பான் கி-மூன் தற்போது 2வது முறையாக அங்கு சென்றுள்ளது நினைவு கூரத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications