16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை.. ஆஸ்திரேலியாவில் நிறைவேறியது சட்டம்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் மூலம் விதியை மீறும் நிறுவனங்களுக்கு ரூபாய் 275 கோடி வரை அபராதம் விதிக்க முடியும்.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப் போவதாக, அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த சட்டத்துக்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்தன.

பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் எட்டு மாகாணங்களின் தலைவர்களுடன், இந்தச் சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். அவர்களும் இதற்கு முழு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மீது விவாதம் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நடைபெற்று நேற்று கீழ் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் 102 வாக்குகள் ஆதரவாகவும், 13 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.
இந்த மசோதா இன்று மாலை செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. எனவே, இப்போது இந்த மசோதா சட்டமாக மாறுவது உறுதியாகிவிட்டது. 2025 நவம்பர் மாதம் இந்த சட்டம் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் உள்ளிட்ட அரசு தரவுகளைக் கொண்டு வயது சரிபார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறி, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடக கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கும் தளங்களுக்கு 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் 275 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.
சிறுவர்களின் அறிவை வளர்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரே அடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அவர்களுக்கு கற்றுத் தருவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று சிறுவர்கள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சமூக ஊடகங்களை 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டாலும், இதனை நடைமுறைப்படுத்துவது சிக்கலானது என்றும், சிறுவர்கள் வேறு வழிகளில் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications