Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்பார்க்கவேயில்லை.. ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல் எதிர்ப்பு அலை! சிட்னி நகரை ஸ்தம்பிக்க வைத்த போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், காசா போர் குறித்த மக்களின் ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தும் ஒரு பிரம்மாண்ட பேரணி சமீபத்தில் நடைபெற்றது. வழக்கமாக சிறிய அளவில் நடக்கும் போராட்டங்கள், இப்போது சிட்னி ஹார்பர் பிரிட்ஜ் (Sydney Harbour Bridge) போன்ற பிரசித்தி பெற்ற இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது உலகெங்கிலும் காசா விவகாரத்தில் மக்களின் மனநிலை மாறி வருவதைக் காட்டுவதாக போராட்டக்குழு தெரிவித்துள்ளது.

Australia Gaza Israel

ஆஸ்திரேலிய அரசின் மீது அழுத்தம்

கடும் மழை மற்றும் குளிர் போன்ற மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல், சுமார் 90,000 பேர் வரை இந்தப் பேரணியில் பங்கேற்றனர். போலீசாரே இந்த எண்ணிக்கையை உறுதி செய்துள்ளனர். அதேநேரம் போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்த அமைப்பினர், சுமார் 3 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் கூடியதாக கூறியுள்ளனர். இவ்வளவு பெரிய அளவில் மக்கள் கூடியது, தங்கள் நாட்டு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்ற ஆஸ்திரேலிய மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் (Penny Wong) கூட, காசாவில் நடக்கும் மனிதாபிமானமற்ற சூழல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மரணங்கள் ஆகியவற்றை எண்ணி ஆஸ்திரேலியர்கள் வருந்துவதாகவும், அமைதி மற்றும் போர்நிறுத்தத்தை நாடுவதாகவும் கூறியுள்ளார்.

இரண்டு-நாடுகள் தீர்வு

ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசு பரிசீலித்து வருகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) மற்றும் மூத்த அமைச்சர்கள் இது 'எப்போது நடக்கும் என்பதுதான் கேள்வி, நடக்குமா என்பது இல்லை' என்று கூறியுள்ளனர். இது அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபடுகிறது. "பாலஸ்தீனம் என்ற ஒரு நாட்டை அங்கீகரிக்காவிட்டால், அங்கீகரிக்க பாலஸ்தீனமே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது," என்றும் அமைச்சர் வாங் கவலை தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகள்

இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் வெறும் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது பற்றி மட்டும் பேசவில்லை. அவர்களின் முக்கிய கோரிக்கைகள்:

  • இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்.
  • ஆயுத வர்த்தகத்தை நிறுத்த வேண்டும்.
  • காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
  • உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய படைகள் வெளியேற வேண்டும்.

ஆஸ்திரேலியா இஸ்ரேலுக்கு நேரடியாக ஆயுதங்கள் வழங்குவதில்லை என்று கூறினாலும், இஸ்ரேல் பயன்படுத்தும் F-35 ரக போர் விமானங்களுக்கான சில பாகங்களை உற்பத்தி செய்யும் வர்த்தக செயின் தொடரில் ஆஸ்திரேலிய நிறுவனங்களும் உள்ளன. இருப்பினும், ஆஸ்திரேலிய அரசு இதற்கு முழுப்பொறுப்பு ஏற்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளது.

உலக நாடுகளுக்கு ஒரு செய்தி

இந்தப் பேரணியின் பிரம்மாண்டம், உலகெங்கிலும் உள்ள காஸா ஆதரவு மக்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இஸ்ரேல் ஆதரவுப் செயற்கை பிரச்சாரங்களை மக்கள் இப்போது புரிந்து கொண்டு, அதிக அளவில் ஒன்றிணைந்து இந்த இனப்படுகொலையைத் தடுக்க முன்வருவார்கள் என்று இந்தப் போராட்டத்தின் அமைப்பாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஒரு பிரம்மாண்ட நிகழ்வுக்கும் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, போராட்டத்திற்கு பிறகு, ஆஸ்திரேலிய அரசு 20 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ($13 மில்லியன்) காசாவுக்கு கூடுதலாக உதவியாக அறிவித்தது. இதன் மூலம் கடந்த 2023 அக்டோபர் முதல் மொத்த உதவி 130 மில்லியன் டாலர்களாக (84 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) உயர்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த போராட்டம் ஒரு செய்தியை அனுப்புகிறது: மக்கள் இனி அமைதியாக இருக்க மாட்டார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+