மீண்டும் போராட்டக் களமாகும் நெடுவாசல்.. நாளை 100 கிராம மக்கள் திரள்கிறார்கள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் நெடுவாசல் கிராமத்தில் கூடி போராட முடிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெடுவாசல் கிராமத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் நாளை முதல் போராட முடிவு செய்துள்ளதால் நாளை முதல் நெடுவாசல் மீண்டும் போராட்ட களமாக மாறவுள்ளது.
இயற்கை எரிவாயு எடுக்க கர்நாடக பாஜக எம்.பி குடும்பத்தைச் சேர்ந்த ஜெம் லாபரட்டரீஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்றும் கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
22 நாள்கள் இதுதொடர்பாக போராடிய மக்களிடம் விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை கொண்டு வரமாட்டோம் என்று மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு ஒப்பந்தம்
இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த 27-ஆம் தேதி நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த 32 வகையான அனுமதிகளை அந்த நிறுவனங்கள் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

அனுமதிக்க மாட்டோம்
இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர் போராட்டத்தை வாபஸ் பெறவைத்துவிட்டு மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக குற்றம்சாட்டியது. இந்நிலையில் நெடுவாசல் போராட்டக் குழுவினரோ, மத்திய அரசு அனுமதி அளித்தாலும் தங்கள் உடலில் உயிர் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணை கூட அள்ள விடமாட்டோம் என்றனர்.

தமிழகம் வஞ்சிப்பு
இந்நிலையில் விவசாயிகள் பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை என தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என்று போராடியும் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்ததால் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

நாளை போராட்டம்?
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறக் கோரி நாளை 6-ஆம் தேதி 100 கிராமத்தினர் போராட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நெடுவாசல் மீண்டும் போராட்ட களமாக மாற உள்ளது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications