நெல்லையில் தொற்று நோய்களை தடுக்க 101 நடமாடும் மருத்துவ குழுக்கள் துவக்கம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் பல பகுதிகளில் வெள்ளத் தடுப்பு பணிகள் மற்றும் அவசர மருத்துவ உதவிகளை மேற்கொள்ள 101 நடமாடும் மருத்துவ குழுக்களை சிறப்பு அதிகாரி துவக்கி வைத்தார்.

தமிழக அரசு நல்வாழ்வுத் துறை சார்பில் நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் அவசர மருத்துவ உதவிகளுக்கு மாவட்டம் முழுவதும் 101 நடமாடும்

மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு மருந்தாளுனர், உதவியாளர் உள்பட 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அவசர வெள்ள மீட்பு, மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் 1077 மற்றும் 108 என்ற எண்களுக்கு போன் செய்தால் அவர்கள் விரைந்து வந்து நோய் பரவாமல் தடுப்பார்கள். பாளை வ.உ.சி. மைதானத்தில் நடந்த நடமாடும் மருத்துவ குழுக்கள் துவக்க நிகழ்ச்சிக்கு கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். வெள்ள நிவாரண பணி சிறப்பு அதிகாரி செந்தில்குமார் நடமாடும் மருத்துவ குழுக்களின் வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அவசர காலங்களில் இந்த வாகனங்களுக்கு போன் செய்தால் அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தின் அருகே உள்ள மற்ற வாகனங்களையும் தொடர்பு கொண்டு வரவழைப்பார்கள்.

தண்ணீர், காற்று உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கவும், அவை பரவாமல் இருக்கவும், நோய் பாதித்தவர்களுக்கு தேவையான

மருந்துகள் கொடுக்கவும் இவர்கள் உடனடியாக களம் இறங்குவார்கள். இந்த ஆம்புலன்ஸ் சேவையில் பல பெண்கள் டிரைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+