சுனாமி நினைவு தினம்... தமிழக கடலோரங்களில் சோக அலைகள்.. மக்கள் கண்ணீர் அஞ்சலி!
சென்னை: தமிழகத்தில் சுனாமி தாக்கியதன் 10வது ஆண்டு தினம் இன்று சோகத்துடன் அனுசரிக்கப்படுகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளை சுழற்றியடித்த தினம் இன்று. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி அலைகள் தமிழக கடலோரங்களைத் தாக்கியது. இந்த நாளின் 10வது நினைவு தினம் இன்று சோகத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோரங்கள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி படையல் வைத்து நினைவு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். நினைவிடங்கள், சர்ச்சுகள், கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
கடல் நீரில் மலர் தூவி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனைத்துக் கடலோரக் கிராமங்களிலும் இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கப் போகவில்லை. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் கடலோரங்களில் நடந்து வருகின்றன.
பலியானோர் குடும்பத்தினர் தவிர பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் கடலோரங்களில் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications