For Daily Alerts
Just In
விருதுநகர் அருகே ஆடு மேய்க்கும் சிறுவன் இடி, மின்னல் தாக்கி பலி
விருதுநகர்: விருதுநகர் அருகே இடி, மின்னல் தாக்கி சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராமர். அவரது மகன் காளீஸ்வரன்(14). காளீஸ்வரன் திங்கள்கிழமை வழக்கம் போல் ஆடு மேய்க்க சென்றுள்ளார். காலை முதல் மாலை வரை மலையில் ஆடு மேய்த்துவிட்டு, மாலை சுமார் 6 மணி அளவில் மலையில் இருந்து ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கடும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. காளீஸ்வரன் மீது இடி, மின்னல் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
ஆடு மேய்க்க சென்ற சிறுவன் இடி, மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Comments
English summary
A 14-year old shepherd died after lightning struck him near Virudhunagar.