தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு... வெங்கடேச பண்ணையார் நினைவு நினைத்தையொட்டி பதற்றம்
தூத்துக்குடி : வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினத்தையொட்டி இன்று மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவையின் நிறுவனரான வெங்கடேஷ் பண்ணையாரின் 12 ஆவது நினைவு தினத்தையொட்டி அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நாளை (சனிக்கிழமை) குருபூஜை நடைபெறுகிறது.

கடந்த ஆண்டுகளில் பல்வேறு நினைவு தினங்களில் நடந்த நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு அமைதியை உறுதிப்படுத்தும் வகையிலும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக, ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடை உத்தரவுக் காலங்களில் ஊர்வலங்கள் நடத்தவும், 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கும் தடைவிதிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications