போதையில் வீடு புகுந்து சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபர் கைது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் வீடு புகுந்து சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் கோமதியாபுரம் 6வது தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். புதுமனை இரண்டாவது தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர்கள் இருவரும் இரவு 7 மணிக்கு அங்குள்ள குளக்கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இருவரும் புகுந்து அங்கு தனியாக இருந்த இரண்டு சிறுமிகளை அறைக்குள் பூட்டி பலத்காரம் செய்ய முயன்றனர்.
சிறுமிகள் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வரவே இரவரும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் பொதுமக்கள் அவர்களை துரத்தி சென்றனர். இதில் முருகானந்தம் மட்டும் பொதுமக்கள் பிடியில் சிக்கி கொண்டார். இஸ்மாயில் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த டவுன் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நவீன் தலைமையில் போலீசார் அங்கு வந்து முருகானந்தத்தை கைது செய்தனர். பின்னர் அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பி ஓடிய இஸ்மாயில தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
மது குடித்துவிட்டு வீடு புகுந்து சிறுமிகளை பலத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.