திண்டுக்கல் அருகே 16 அடி நீள மலைப்பாம்பை பிடித்த கிராம மக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிப்பட்டதால் பரபரப்பு எற்பட்டது. பாம்பை பிடித்த கிராம மக்கள் பத்திரமாக தீயணைப்புத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் அருகே ஆத்தூரிலிருந்து காமராஜர் அணைக்கு செல்லும் வழியில் ராமசாமி என்பவரது தோட்டத்து பூ வயலில் 16 அடி நீளம் 35 கிலோ எடை கொண்ட மலைப் பாம்பை ஊர் பொதுமக்கள் பிடித்து தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மழைக்காலங்கள் என்றாலும் சரி, வெயில் காலமாக இருந்தாலும் சரி ஊருக்குள் படையெடுக்கும் மலைபாம்புகள் அங்குள்ள ஆடுகள், கோழிகளை வேட்டையாடுவதுடன் சிறுவயது உடையவர்களையும் வேட்டையாடுவது வழக்கம், இந்நிலையில் ஆங்காங்கே மலைப்பாம்புகளை அப்பகுதி மக்கள் உயிருடன் பிடித்து தீயணைப்பு வீரர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆத்தூர் அருகே, சுமார் 16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்புவை உயிருடன் பிடித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, பிடிபட்ட பாம்புக்கு எந்த வித சேதாரமும், இல்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மலைப்பாம்புகளை பெற்றுக் கொண்ட தீயணைப்பு துறையினர் அந்த மலைபாம்புவை மலைப்பிரதேசத்தில் கொண்டு விட்டு விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications