"யாராவது காப்பாத்த மாட்டாங்களா?" குற்றால அருவியில் மிதந்தபடியே அடித்து செல்லப்பட்ட சிறுவன்- வீடியோ
தென்காசி: தென்காசியில் குற்றாலம் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடை விடுமுறை என்பதால் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. தமிழகத்தில் மே 20 ஆம் தேதி வரை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் புதிய குற்றாலத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து 5 கி.மீ. தூரம் பயணம் செய்து பழைய குற்றால அருவிகளுக்கு மக்கள் வந்தனர். அங்கு ஆர்ப்பரிக்கும் நீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து படிக்கட்டுகளைத்தாண்டி ஓடி வந்தது. தண்ணீர் அதிகரித்ததும் அங்கிருந்த அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். இதில் தண்ணீர் விழுந்த ஃபோர்ஸில் அங்கு குளித்துக் கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த 16 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து அந்த சிறுவனை தேடும் பணிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டனர். சிறிது நேரத்தில் நீரின் வரத்து குறைந்ததை அடுத்து அரை கி.மீ. தூரத்தில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. அந்த சிறுவனின் தாய் கதறி அழுத காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது.
இந்த நிலையில் சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சிறுவன் வெள்ளத்தில் படுத்தபடியே மிதந்து வருகிறார். ஆனால் தண்ணீரின் வரத்து அதிகபடியாக இருந்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. வீடியோவில் அந்த சிறுவன் உருண்டு பிரண்டபடி வருவதை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது.
அந்த சிறுவனுக்கும் யாராவது நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்ற எண்ணம் வந்திருக்குமே! பழைய குற்றாலத்தில் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சுற்றுலா பயணிகளே உஷாராகி குளிக்காமல் வந்துவிடுவார்களாம். காரணம். மலையில் இருந்து நேரடியாகவே இந்த பழைய குற்றாலத்திற்கு தண்ணீர் வருகிறது.
இதனால் திடீரென தண்ணீர் வரத்து அதிகரிப்பது பயணிகளுக்கு தெரியாது. ஒரு வேளை குற்றாலத்தில் மழை பெய்தால் நிச்சயம் மலைகளில் அதிக அளவுக்கு மழை இருக்கும் என தெரிந்து கொண்டு குளிப்பதை தவிர்த்துவிடுவார்கள். ஆனால் நேற்று யாருடைய நேரமோ, குற்றாலத்தில் மழையே பெய்யலையாம். மலையில் மட்டும் மழை பெய்து இந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பழைய குற்றாலத்தில் ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. இதனால் வெள்ளம் வந்தால் அடித்த ஃபோர்ஸில் நேராக பள்ளத்திற்குத்தான் செல்வார்கள். சிலர் நேற்றைய தினம் கம்பியை பிடித்துக் கொண்டும் தப்பியுள்ளனர். ஆனால் கம்பியை விட்டால் நேரடியாக பள்ளத்திற்குத்தான். அதில் உள்ள பாறைகளில் அடிப்பட்டு நேராக தண்ணீரில் விழும் நிலை ஏற்படும்.
இந்த சம்பவத்தை அடுத்து குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தென்காசி மாவட்டத்திற்கு மே21 ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்பதால் குற்றாலத்திலுள்ள பிரதான அருவிகளான பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அருவிகள், அணைப் பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்கத் தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் மிக கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண் - 1077 அல்லது 04633 290548 என்ற எண்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications