ஆர்.கே.நகரில் 1788 போலி வாக்காளர்கள்: ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம்
ஆர்.கே.நகரில் 1788 போலி வாக்காளர்கள் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகரில் 1788 போலி வாக்காளர்கள் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகரில் 5117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை என கூறி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஆர்.கே.நகர் தொகுதியில் 1,788 போலி வாக்காளர்கள் இருக்கின்றனர்; இவர்கள் தேர்தலில் வாக்களிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி, 1,947 வாக்காளர்கள் பெயர் இரண்டு இடங்களில் இருக்கின்றன; அவை நீக்கம் செய்யப்பட்டுவிட்டன எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications