18 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டகாசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: 18 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 3 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களை காங்கேசன் முகாமிற்கு கொண்டு சென்று கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று, கடலூர் அருகே படகு பழுதால் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் 11 பேரிடம் கடலோர காவல்படை விசாரணை நடத்தியிருந்தது. அவர்கள் தங்கள் படகு பழுதானதால்தான் கரை ஒதுங்கியதாகவும், வேறு நோக்கம் இல்லை என்றும் கூறியிருந்தனர்.
இன்று நமது மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications