நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம் டீச்சர்.. நம்பி சென்ற ஆசிரியை.. பணம் பறித்த மோசடி கும்பல்
பள்ளி ஆசிரியையை கடத்தி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
திருப்பூர் : அரசு பள்ளி ஆசிரியைக்கும் அவரது ஆண் நண்பருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறி, ஆசிரியையிடம் பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சசிகலா.. 43 வயதாகிறது.. கல்யாணமாகி விவாகரத்து பெற்றவர்.. இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் டிராயிங் டீச்சராக வேலை பார்க்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு சசிகலா, பல்லடத்தில் ஒரு விழாவுக்கு சென்றிருந்தார். அப்போது தன்னுடன் ஸ்கூலில் படித்த ஆசாத் என்பவரை சந்தித்தார்.. விவாகரத்து ஆன விஷயத்தையும் இவரிடம் பகிர்ந்துகொண்டார்.. உடனே ஆசாத், சசிகலாவை கல்யாணம் செய்துகொள்வதாக சொன்னார். ஆனால், ஆசாத் ஏற்கனவே கல்யாணமானவர்.

ஆசாத்
இருவரும் தினமும் செல்போனில் பேசி கொண்டே வந்தனர்.. திடீரென ஆசாத்திடம் இருந்து போன் எதுவும் வரவில்லை.. போன் போட்டாலும் எடுக்கவில்லை.. இதனால் குழம்பி போயிருந்தார் சசிகலா. அந்த சமயத்தில்தான், கடந்த 30-ம் தேதி சசிகலாவுக்கு ஒரு போன் வந்தது.. ஆசாத்தின் நண்பர் மதன் என்று சொல்லி ஒருவர் பேசினார்.

சசிகலா
ஆசாத்துடன் கல்யாணம் செய்துவைக்கிறேன், 1 லட்சம் தருவீர்களா என்று கேட்டார். அதற்கு சசிகலாவும் ஒப்பு கொண்டுள்ளார். 1ம் தேதி மதியம் 12 மணிக்கு அவினாசி சாலையில் உள்ள பப்பிஸ் ஹோட்டல் அருகே சசிகலாவை காத்திருக்க சொன்னார்.. அதன்படியே காத்திருந்த சமயம், ஒரு கார் வந்தது.. அதில் ஏறி கொண்டபிறகுதான் தெரிந்தது அந்த காரில் அபுதாகீர், மணிகண்டன், சசிகுமார் ஆகியோர் இருந்துள்ளனர்.

அரிவாள்
ஆசாத் எங்கே என்று சசிகலா கேட்டதற்கு, பணத்தை முதலில் தரும்படி கேட்டனர். இதற்கு சசிகலா மறுக்கவும், கொலை செய்துவிடுவோம் என்று காருக்குள்ளேயே அரிவாளை காட்டி மிரட்டினர். 2 நாட்களாக அதாவது 3-ந் தேதி சாயங்காலம் வரை சசிகலாவுக்கு சாப்பாடு எதுவுமே தராமல் காரிலேயே மிரட்டி வைத்து ரூ.90 ஆயிரம் மிரட்டி வாங்கி உள்ளனர். பிறகு ஒருவழியாக சசிகலா அங்கிருந்து தப்பித்து உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடிவந்து, திருமுருகன்பூண்டி போலீசிலும் புகார் அளித்தார்.

கைது
இதையடுத்து, டீச்சரை கடத்திய அபுதாகீர், அவரது தம்பி தஸ்தகீரை போலீசார் கைது செய்து ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமான விசாரணையில், ஆசாத், சசிகலா டீச்சர் பற்றி நண்பர்களிடம் சொல்லி உள்ளார்.. இதை பயன்படுத்திதான் நண்பர்கள் டீச்சரை கடத்தி பணம் பறிக்க திட்டம் போட்டனர் என்பது தெரியவந்தது. இப்படி ஒரு சம்பவம் நடந்ததே ஆசாத்துக்கு தெரியாது என்பதுதான் அதிர்ச்சியே!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications