விருதுநகர் சாயல்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 2 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: விருதுநகர் சாயல்பட்டி அருகே பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர்.
தீபாவாளி நெருங்கும் நிலையில் விருதுநகர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
விருதுநகர் சாயல்பட்டி அருகே இன்று பட்டாசு ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தீவிபத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர். கூடுதல் தகவல்கள் விரைவில் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications