காஞ்சிபுரத்தில் லேப் டெக்னீஷியன் வீட்டில் 27 பவுன் நகை, ரூ.8,000 ரொக்கம் திருட்டு
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே லேப் டெக்னீஷியனின் வீட்டில் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ. 8 ஆயிரம் திருடு போயுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள கிதிரிப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமிகாந்தன்(34). லேப் டெக்னீஷியன். அவரது மனைவி மீனாட்சி(30). அவர்களின் மகன் அகிலேஷ்(2). லட்சுமிகாந்தனின் வயதான பெற்றோரும் அவருடன் வசித்து வருகிறார்கள்.
வெள்ளிக்கிழமை இரவு வீட்டை திறந்தபடியே வைத்துவிட்டு தூங்கியுள்ளனர். மறுநாள் காலை எழுந்தபோது பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் இருந்த 27 பவுன் தங்க நகைகள், ரூ.8 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து லட்சுமிகாந்தன் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்து சென்றனர்.
ஆட்கள் தூங்கிய சமயத்தில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications