மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ள தண்ணீர் போதுமானதல்ல… பி.ஆர். பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மேற்பார்வைக் குழு தற்போது அறிவித்திருக்கும் தண்ணீரின் அளவு போதுமானதல்ல என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் கூடிய மேற்பார்வைக் குழு தமிழகத்திற்கு செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து 10 நாட்களுக்கு 3000 கன அடி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பி.ஆர். பாண்டியன், மேற்பார்வைக் குழு அளித்துள்ள இந்த உத்தரவை ஏற்க முடியாது என்றும், இந்த தண்ணீர் தமிழக விவசாயத்திற்கு போதுமானதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடக அணையில் உள்ள நீரின் அளவை ஆய்வு செய்ய மேற்பார்வைக் குழு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications