நின்ற லாரி மீது வேன் மோதியதில் கேரளாவைச் சேர்ந்த 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரி மீது கேரளாவிலிருந்து வந்த வேன் மோதியதில் அந்த வேனில் பயணம் செய்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அரியலூரில், அறந்தாங்கியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி மரத்தடிகளை ஏற்றிச் சென்ற லாரி ஓன்று பழுதாகி சாலையின் ஓரத்தில் நிற்காமல் நடு வழியில் நின்றுள்ளது.

அப்போது அதே வழியாக, கேரளாவில் இருந்து சுற்றுலா சென்ற டெம்போ ட்ராவலர் ஒன்று படு வேகமாக வந்து, நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் டெம்போ ட்ராவலரில் பயணம் செய்த டிரைவர் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை, தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications