சிவகாசியில் ஒயின்ஷாப்பில் மது அருந்திய 4 பேர் பலி.. மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை
Recommended Video
விருதுநகர்: சிவகாசியில் மதுக்கடையில் மது அருந்திய 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது பராசக்தி நகர். இங்கு இயங்கிவரும் அரசு பானக்கடை ஒன்றில் 8 பேர் இன்று பிற்பகல் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மது அருந்தியவர்கள் ஒருவர்பின் ஒருவராக 4 சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்தனர்.
அவர்களில் கவுதம், கணேசன், முகமது இப்ராஹிம் என்பவர்கள் என தெரியவந்துள்ளது. மற்றொருவரின் பெயர் விவரம் தெரியவில்லை. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த அவர்கள் உயிரிழந்த 4 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடன் மது அருந்திய மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மதுபான கடையில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். இதன்பின்னரே முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.