தென்காசியில் நிலத்தகராறில் இரட்டை கொலை.. 3 பேர் கைது.. மேலும் 3 பேருக்கு வலை
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நிலத்தகராறில் வழக்கறிஞர், முதியவரை வெட்டி கொன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ல நெட்டூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் அசோக்குமார் (27). இவர் தென்காசி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
இவர்களது வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்து வருபவர் குழந்தை பாண்டி. இவரது மகன் சுரேஷ் (27). இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும் அசோக்குமாரின் பெரியப்பா துரைராஜுக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று காலை சின்னதுரைக்கு சொந்தமான வைக்கோலுக்கு தீ வைத்து கொளுத்தினர். இது தொடர்பாக சின்னதுரை ஆலங்குளம் போலீஸில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் நேற்று இரவு தனது உறவினர்களுடன் சென்று அப்பகுதிக்கு சென்றார்.
அங்கு தெருவில் நின்றுக் கொண்டிருந்த துரைராஜை சரமாரியாக வெட்டினார். இதையடுத்து சின்னதுரை வீட்டுக்குள் புகுந்து அசோக்குமாரையும் வெட்டி சாய்த்தார். இதை தடுக்க வந்த அவரது உறவினர் அருள் ஜோதிக்கு கை விரல் துண்டானது. இதையடுத்து அந்த கும்பல் தப்பி சென்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற துரைராஜ், செல்லும் வழியில் இறந்தார்.
தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. சாம்சன், ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து 2 பேரது உடலும் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரட்டை கொலை சம்பவத்தை அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் ஆத்திரமடைந்த துரைராஜ் உறவினர்கள் சுரேஷ் வீடு மீது கல்வீசி தாக்கினர். இதைத் தொடர்ந்து இந்த இரட்டை கொலை வழக்கில் சுரேஷ், குழந்தை பாண்டி- ஜக்கம்மாள், உறவினர்கள் மகாராஜன், குமார் என்ற முருகன், சரவணன் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த குழந்தைபாண்டி, மகாராஜன், குமார் ஆகிய 3 பேரை இன்று அதிகாலை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சுரேஷ், ஜக்கம்மாள், சரவணன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications