சேலம் கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை.. ஆனைவாரி அருவியில் காட்டாற்று வெள்ளம்.. 300 பேர் தவிப்பு!
சேலம் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம்: கல்வராயன் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை நாள் என்பதால் மக்கள் பொழுதுபோக்கு தளங்களில் குவிந்து விடுமுறையை கழித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கல்வராயன் மலைப்பகுதியிலம் மக்கள் குவிந்தனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

காட்டாற்று வெள்ளம்
இதன் காரணமாக சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு சென்ற 300 பேர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

குளிக்க தடை
அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை காரணமாக, அந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முட்டல் அருவி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 100 பேர் உயிர்தப்பினர். ஆத்தூர் அருகே முட்டல் அருவியில் குளிக்க சென்றவர்கள் திரும்பும் போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளனர்.

ஆற்றை கடந்ததால்
ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் அதிகரிக்கும் முன் ஆற்றை கடந்ததால் 100-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications