பல்லடம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. கோவை இன்ஜினியர் உட்பட 4 பேர் பலி- வீடியோ
திருப்பூர் அருகே சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியவர்களின் கார் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
திருப்பூர் : திருப்பூர் பல்லடம் அருகே தாராபுரம் சாலை கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
கோவையைச் சேர்ந்த பொறியாளர் பிரதீப் தன்னுடைய நண்பர்கள் விஜயன், மாரியப்பன், சுதாகர், அன்பழகன் ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா முடிந்து கோவை திரும்பிய போது, கள்ளிப்பாளையம் பகுதியில் வேகமாக வந்து திரும்ப இயலாமல் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் காரில் பயணித்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications