ஆரம்பிச்சிட்டாங்க.. தேர்தல் பறக்கும் படையிடம் ரூ.40 லட்சத்துடன் சிக்கிய அதிமுக பிரமுகர்
திருப்பரங்குன்றம் தொகுதியில் 40 லட்சம் ரூபாயை காரில் எடுத்துச் சென்ற அதிமுக பிரமுகர் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கினார்.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டபேரவைத் தொகுதியில் வரும் 19ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அத்தொகுதியின் எல்லைகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 40 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த 3 தொகுதிகளிலும் எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் தேர்தல் பறக்கும் படை ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை தேனியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் செல்லும் கார்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது, மாடக்குளம் என்ற இடத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அந்த காரில் 40 லட்சம் ரூபாய் ரொக்கத்தோடு வந்தவர் பிடிபட்டார். அவர் யார் என்று பறக்கும் படையினர் விசாரித்த வோது, அதிமுக பிரமுகர் நாராயணசாமி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, கடந்த மே 16ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 19ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள இந்தத் தேர்தலிலாவது பணப்பட்டுவாடா புகார் எழாத வகையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications