ஜூன் 6ல் நாடே திரும்பிப் பார்க்கும் 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் - செங்கோட்டையன்
பள்ளி மாணவர்களின் நலன் கருதி 41 அறிவிப்புகளை வெளியிடவுள்ளோம் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: பள்ளி மாணவர்களின் நலன் கருதி 41 அறிவிப்புகளை வெளியிடவுள்ளோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் எதிர்காலத்தை கருதி 41 அறிவிப்புகள் வரும் 6ஆம் தேதி முதல்வர் அனுமதியுடன் வெளியிடப்படும்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருதி வெளியிடப்படும் இந்த அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிப் பார்க்கும் என்று கூறினார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதிலிருந்து புதிய அறிவிப்புகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.
10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் ரேங்க் முறையை நீக்கினார். 11ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு புதிய அறிவிப்புகளை வெளியிடப்போவதாக கூறியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு பிடித்த அமைச்சராக மாறி வருகிறார் செங்கோட்டையன்.