உள்ளாட்சித் தேர்தல்: கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கப் போகும் 5. 80 கோடி பேர்
சென்னை: தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தேர்தல் பார்வையாளர் என்று மாநிலம் முழுவதும் 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பெற்று, உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தேசிய தகவல் தொடர்பு மையத்துடன் இணைந்து ஆன்-லைன் முறையில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2.88 கோடி ஆண் வாக்காளர்கள், 2.92 பெண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 584 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 5.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஊரக பகுதிகளில் 1.59 கோடி ஆண் வாக்காளர்கள், 1.60 கோடி பெண் வாக்காளர்கள், 1,629 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 3.19 கோடி வாக்காளர்களும், நகர்ப்புறங்களில் 1.29 கோடி ஆண் வாக்காளர்கள், 1.32 கோடி பெண் வாக்காளர்கள், 2 ஆயிரத்து 955 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 2.61 கோடி வாக்காளர்களும் உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தேர்தல் பார்வையாளர் என்று மாநிலம் முழுவதும் 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேசிய வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகளை நுன்பார்வையாளர்களாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறரை லட்சம் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்ட உள்ளனர். வாக்குப்பதிவின் ரகசிய தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில் வாக்குச்சாவடிகளின் நடவடிக்கையை கண்காணிக்க வீடியோ பதிவு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications