தர்மபுரி: பென்னாகரம் அருகே தடுப்பணையில் மூழ்கி 5 சிறுமிகள் பலி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே துணி துவைக்க சென்ற ஐந்து சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிந்த சிறுமிகளின் பெயர் ராஜேஸ்வரி (14), புவனேஷ்வரி (14), திரிஷா (12), அஞ்சலி (14), ஹரிணி (10). இவர்கள் பென்னாகரம் அருகே உள்ள சின்னபூம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர்கள். காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதை அடுத்து சிறுமிகள் அங்குள்ள தடுப்பணையில் இன்று காலை துணி துவைக்க சென்றனர்.

துணி துவைத்துவிட்டு சிறுமிகள் 5 பேரும் அணையில் குளித்துள்ளனர். அப்போது, சிறுமிகள் ஐந்து பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஊர் மக்கள் தடுப்பணைக்கு வந்து மாணவிகளின் உடல்களை மீட்டனர்.
இவர்களது உடல்கள் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஒரே கிராமத்தை சேர்ந்த 5 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications