எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் காரைக்கால் அருகே கைது!
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டிணம்: எல்லை தாண்டி வந்த 5 இலங்கை மீனவர்களை இந்தியக் கடலோர காவல்படையினர், கைது செய்துள்ளனர்.
காரைக்கால் கடல்பகுதியில் மர்ம படகு சுற்றுவதை அறிந்த இந்திய கடலோர காவல்படையினர் அந்த படகை மடக்கினர். அதில் 5 பேர் இருந்தனர். அவர்கள் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து எல்லைதாண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தமிழக கடலோர காவல் குழுமத்திடம் நேற்றிரவு ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை மீனவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், படகில் ஏற்பட்ட பழுதின் காரணமாக காற்றின் வேகத்தில் திசை மாறி வந்ததாக கூறினார்கள்.
இன்று காலை நாகை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் இலங்கை மீனவர்கள் ஐவரும் புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications