சிறைக்குள் செல்போன் பேசும் கைதிகளுக்கு 6 மாதம் தனிமைச் சிறை: புதிய தண்டனை அமல்
சென்னை: சிறையில் வாழும் கைதிகள் செல்போனில் பேசுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு 6 மாதம் தனிமைச்சிறை என்ற புதிய தண்டனை அமலுக்கு வருகிறது.
அவ்வப்போது சிறை அதிகாரிகளின் துணையோடோ அல்லது இல்லாமலோ சிறைக்கைதிகள் செல்போனில் பேசி மாட்டிக் கொள்வதுண்டு. சமீபத்தில் கூட கேரளத்துச் சிறைகளில் கைதிகள் ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக்கில் உலா வந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இந்நிலையில், சிறைக்குள் இது போன்ற அத்துமீறல்களை களையும் முயற்சியாக புதிய அதிரடி தண்டனை ஒன்றை உடனடியாக அமல் படுத்துகிறார்கள் சிறை அதிகாரிகள். அதன் படி, சிறைக்குள் செல்போனில் பேசி பிடிபடும் கைதிகள், 6 மாதம் தனிமைச்சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

பொது தொலைபேசித் திட்டம்...
தமிழகத்தில் சிறை கைதிகள் போனில், உறவினர்களிடம் பேசி மகிழும் வகையில், பிரமாண்ட பொது தொலைபேசி திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

ரூ 1.63 கோடியில்....
இந்த திட்டத்தின்படி ரூ.1.63 கோடி செலவில், 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் சிறைகள் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள இளம்குற்றவாளிகள் சீர்திருத்தப்பள்ளி ஆகியவற்றில் மொத்தம் 53 பொது தொலைபேசிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதிரடி தண்டனை...
இந்தப் பொது தொலைபேசி திட்டமானது, கைதிகள் சிறைகளில் செல்போனில் பேசுவதை தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இனிமேல், சிறைகளில் செல்போனில் பேசும் கைதிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் அதிரடி திட்டம் ஒன்றை, சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி கொண்டு வந்துள்ளார்.

சுற்றறிக்கை....
இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற அனைத்து சிறைத்துறை சூப்பிரண்டுகளுக்கும், திரிபாதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் துரைசாமி, மவுரியா, அனிபா ஆகியோருடன் ஆலோசனை நடத்தியபின் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தனிமைச் சிறை...
அதன்படி, இனி சிறைகளில், செல்போனில் பேசி பிடிபடும் கைதிகள் உடனடியாக தனிமைச்சிறையில் அடைக்கப்படுவார்கள். 6 மாதங்கள் அவர்கள் இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

கிரிமினல் நடவடிக்கை....
அதே 6 மாத காலம், குறிப்பிட்ட கைதிகள், பார்வையாளர்களை சந்திக்கவும் தடை விதிக்கப்படும். மேலும் அந்த கைதிகள் மீது கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

பரோல் இல்லை....
அவசரகால விடுமுறை மற்றும் பரோலில் செல்லவும் இந்த கைதிகளுக்கு அனுமதி இல்லை. கைதிகளின் செல்போன் பேச்சுக்கு துணை போகும், சிறை ஊழியர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என அந்த சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறை அதிகாரிகளுக்கும்....
மேலும், இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் அல்லது உடந்தையாக இருக்கும் சிறை ஊழியர்கள், உடனே பணியில் இருந்து, டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் கூட, இதேபோன்று குற்றம்சாட்டப்பட்ட பாலையா என்ற சிறை அதிகாரி ஒருவர் தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications