7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான கிரிஜா வைத்தியநாதன், ஆர்.கண்ணன், கே.கணேசன் மற்றும் மத்திய அரசு பணிக்கு சென்றுள்ள அசோக்குமார் குப்தா, சி.பி. சிங், சசி சேகர், ராஜீவ்நயன் சவுபே ஆகிய 7 பேருக்கும் தலைமை செயலாளராக உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இவர்கள் 1981ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணியில் சேர்ந்தனர். தங்களது பணி மூப்பு அடிப்படையில், இதுவரை முதன்மை செயலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
தற்போது, இவர்கள் இனி கூடுதல் தலைமை செயலாளர் என்ற பதவியை வகிப்பார்கள் என அரசு செயதிக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications