கடலுக்கு சென்ற 737 மீனவர்கள் பத்திரமாக உள்ளனர்.. அச்சம்கொள்ளத் தேவையில்லை.. அமைச்சர் ஜெயக்குமார்!
கடலுக்கு சென்ற 737 மீனவர்களும் பத்திரமாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி: கடலுக்கு சென்ற 737 மீனவர்களும் பத்திரமாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2000 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மீனவர்களை மீட்டுத்தரக்கோரி கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையில் மீனவர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு ஓகி புயலால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என அவர்களின் குடும்பத்தினர் அஞ்சுகின்றனர். மீனவர்களை மீட்க 2 கப்பல்கள் கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

முதல்வர் வலியுறுத்தல்
அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீனவர்களை மீட்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்கள் பத்திரமாக உள்ளனர்
மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கடலுக்கு சென்ற 737 மீனவர்களும் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருச்சூரில் இருந்து திரும்புகின்றனர்
மேலும் 685 மீனவர்கள் 66 படகுகளுடன் கரை திரும்பி வருகின்றனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 52 மீனவர்கள் 6 படகுகளுடன் திருச்சூரில் இருந்து பேருந்து மூலம் திரும்புகின்றனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அச்சப்பட வேண்டாம்
கன்னியாகுமரியில் இருந்து சென்ற மீனவர்கள் லட்சத்தீவில் ஒதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications