இலங்கைக் கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் ..... கச்சத்தீவு அருகே 8 தமிழக மீனவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தத ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 800 விசைப்படகுகளில் நேற்று மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

8 Rameshwaram Fishermen allegedly arrested by Srilankan navy in Wee hours

மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும், மோட்டர்களையும் சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களை சிறைபிடித்ததுடன், அவர்கள் சென்ற 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நெடுந்தீவு கடற்கடை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+