இலங்கைக் கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் ..... கச்சத்தீவு அருகே 8 தமிழக மீனவர்கள் கைது
ராமநாதபுரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தத ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 800 விசைப்படகுகளில் நேற்று மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும், மோட்டர்களையும் சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களை சிறைபிடித்ததுடன், அவர்கள் சென்ற 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நெடுந்தீவு கடற்கடை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications