சங்க தேர்தல், பார்ட்டிகளுக்கு "எஸ்" ... மக்கள் பிரச்சனைக்கு "எஸ்கேப்".. இவர்கள் சீனியர் நடிகர்கள்!!!
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த 1980களை சேர்ந்த சில நடிகர்கள் தற்போது நடக்கும் தமிழ் சினிமா போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த 1980 களை சேர்ந்த சில நடிகர்கள் தற்போது நடக்கும் நடிகர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை ஆகிய பிரச்சனைகளுக்காக தற்போது தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் போராடி வருகிறார்கள். காலையில் தொடங்கிய இந்த போராட்டத்தில் பெருவாரியான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
மவுன அறவழி போராட்டம் என்ற பெயரில் இந்த போராட்டம் நடைபெற்றது. ரஜினி, கமல், ஷங்கர், இளையராஜா ஆகிய முன்னணி திரையுலகினர் இதில் கலந்து கொண்டனர்.

80 களின் நடிகர்கள்
80 களில் திரையுலகில் கொடிகட்டி பறந்த திரைபிரபலங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மோகன், டி ராஜேந்தர், பாக்யராஜ், கார்த்திக், அர்ஜுன், பிரபு ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்களின் சக நடிகர்களான ரஜினி, கமல் இதில் கலந்து கொண்டனர்.

நடிகைகளும்
அதேபோல் 80 களில் பெரிதாக இருந்த நடிகைகளும் இதில் கலந்து கொள்ளவில்லை. ராதா, அம்பிகா, ராதிகா, குஷ்பு, ரேவதி, ராமயா கிருஷ்ணன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதே சமயத்தில் சமகால நடிகைகளும் இதில் கலந்து கொள்ளவில்லை. சாய் தன்ஷிகா, வரலட்சுமி சரத்குமார் போன்ற சில நடிகைகள் மட்டும் இந்த போரட்டத்தில் கலந்து கொண்டனர்.

சரத்குமார்
அதேபோல் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும் இதில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் ராதா ரவியும் இந்த போராட்டம் பக்கம் தலைகாட்டவில்லை. மேலும் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இடம்மாறி பெரிய ஆட்களாக வளர்ந்து நிற்கும் பிரகாஷ்ராஜ், பிரபுதேவா, லாரன்ஸ் போன்ற நபர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தேர்தல் மட்டும் குறிக்கோள்
ஆனால் இதே 80ஸ் நடிகர், நடிகைகள், நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மட்டும் தவறாமல் போட்டியிடுகிறார்கள். பார்ட்டி என்றா்ல் ஓடுகிறார்கள்.கூத்தடிக்க ஓடும் இவர்கள் மக்கள் போராட்டத்திற்கு வரமாட்டார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications