குவைத்தில் இறந்த மகனின் உடலை மீட்டுத் தாங்க: கலெக்டரிடம் பெற்றோர் மனு
திருவண்ணாமலை: குவைத்திற்கு வேலைக்கு சென்ற இடத்தில் இறந்துவிட்ட தங்களின் மகனின் உடலை பெற்றுத் தருமாறு அம்மாபாளையத்தைச் சேர்ந்த தம்பதி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே இருக்கும் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. அவர் வேலைக்காக குவைத் சென்றார். குவைத்தில் அவர் தோட்ட வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மரணம் அடைந்துவிட்டார்.
பாலாஜியின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப அவர் பணியாற்றிய தனியார் நிறுவனம் மறுத்துள்ளது. பாலாஜியின் மரண செய்தியை அறிந்து வாடும் அவரது பெற்றோர் தங்களின் மகனின் முகத்தை கடைசியாக பார்க்க முடியாதா என்ற கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் மாவட்ட கலெக்டர் ஞானசேகரனை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். குவைத்தில் இறந்த தங்களின் மகனின் உடலை மீட்டுத் தருமாறு அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications