ஆம்பூர் ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்...மிளகாய் பொடி தூவிய மர்மம் என்ன? - வீடியோ
ஆம்பூர் ரயில் நிலையம் அருகே மிளகாய் பொடி தூவப்பட்டு, ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: ஆம்பூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மிளகாய்த்தூள் தூவப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அதைப் பார்த்த பொதுமக்கள் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் உடலை ஆராய்ந்து பார்த்தனர்.

அப்போது அங்கு கிடந்த உடல்மீது, மிளகாய்த்தூள் தூவப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர் இழந்த நிலையில் நிலையில் காணப்பட்டவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. உடல் மீது மிளகாய்த்தூள் தூவப்பட்டிருப்பதற்கான காரணம் குறித்தும், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications