அனிதாவை கட்சியில் சேர்க்கிறீர்கள் அழகிரி என்ன பாவம் செய்தார்?: கருணாநிதிக்கு தொண்டர் கடிதம்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கோரி தொண்டர் ஒருவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கோரி தென் மாவட்ட தொண்டர்கள் திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தொண்டர் ஒருவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
திமுக கழகத் தலைவர் அவர்களின் கனிவான பார்வைக்கு - ஒரு தொண்டனின் வேண்டுகோள்!

ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட என் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார் என சொன்ன அனிதா கழகத்தில் இணைப்பு, ஜெயலலிதா விடுதலைக்கு பட்டாசு
வெடித்து மகிழ்ந்திட்ட கருப்பசாமி பாண்டியனை சேர்க்க முயற்சிகள், கொடி, அறிவாலயம் ம.தி.மு.க.வுக்கு சொந்தம் என வழக்கு தொடர்ந்த மாதவரம் சுதர்சனத்திற்கு
மாவட்ட செயலாளர் பதவி. இவர்களை கழகத்தில் சேர்க்கிறீர்கள். ஆனால் ஜெ - அரசின் பொய் வழக்குகள், அடக்குமுறைகளை எதிர்த்து கட்சியை வளர்த்த மு.க.அழகிரி
என்ன பாவம் செய்தார். உடனே கட்சியில் சேர்க்க உத்தரவிடுங்கள்.
இப்படிக்கு விசுவாசம் உள்ள திமுக தொண்டன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications